இயல்-3
பதிப்பகத்தாருக்குக் கடிதம்
நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக
அனுப்புநர்
ப.பாண்டி,
மாணவச்செயலர்,
6.ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,
அரசினர் மேனிலைப்பள்ளி,
மதுரை,
மதுரை மாவட்டம்-625003.
பெறுநர்
மேலாளர்,
நெய்தல் பதிப்பகம்,
சென்னை-600 001.
பெருந்தகையீர்,
வணக்கம்.உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல் மொழியாகவும் , முதன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது தமிழ்மொழியே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
ப.பாண்டி,
(மாணவச் செயலர்)
இடம்:மதுரை
நாள்:13-03-2025
உறைமேல் முகவரி:
மேலாளர்,
நெய்தல் பதிப்பகம்,
சென்னை-600 001